தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நயன்தாராவிற்கு ஒரு கதை பிடித்திருந்தால் அந்த படத்தை புதுமுக இயக்குனர் இயக்கினாலும் தயங்காமல் நடிக்கிறார். 'மாயா', 'டோரா' படங்கள் புதுமுகங்களின் படங்கள். தற்போதும் அவர் ஒரு புதுமுக இயக்குனரின் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. கோபி நாயனார் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இது ஹீரோயினை சுற்றி நடக்கும் கதை. நயன்தாரா மாவட்ட கலெக்டராக நடிக்கிறார். ஒரு தண்ணீர் பிரச்சினையை மாவட்ட கலெக்டர் எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் கதை. 'காக்கா முட்டை' படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகியோர் இதில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இசை அமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும், மற்ற நடிகர் நடிகைகளும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் கோட்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிக்கிறார்.
"தண்ணீர் பிரச்சனை நம் நாட்டு மக்களின் வாழ்க்கையில் தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த கருத்தை மையமாக கொண்டு தான் நான் இந்த படத்தை இயக்கி வருகிறேன். இந்த படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே நயன்தாரா இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். எங்கள் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாங்கள் படமாக்கியிருக்கிறோம். சமூதாயத்தின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டு வரும் இந்த படமானது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்." என்கிறார் இயக்குனர் கோபி நாயனார்..