தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல், ராதா, சுலக்ஷனா, யமுனா நடித்த படம் 'தூங்காதே தம்பி தூங்காதே' எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரமாண்டமாக எடுக்க எஸ்.பி.முத்துராமன் திட்டமிட்டிருந்தார். அப்போது 'இதயம் பேசுகிறது' ஆசிரியர் மணியன் எஸ்.பி.முத்துராமனையும், தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனையும் சந்தித்து. “நான் தில் ஹா ஹீரா” என்ற இந்திப் படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தேன். கிளைமாக்சையும் பிரமாண்டமாக எடுத்தேன். அந்த படம் ஓடவில்லை. அதிகமாக யாரும் பார்க்கவில்லை. அந்த கிளைமாக்சை வேண்டுமானால் நீங்கள் அப்படியே பயன்படுத்திக் கொள்ளாலாம்” என்றார்.
படத்தை பார்த்த எஸ்.பி.முத்துராமனுக்கு பிடித்திருந்தது. இந்த கதைக்கு இந்தி படத்தின் கி¬மாக்சை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அந்த கிளைமாக்சில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் மோதுவது, கார் வெடித்து சிதறவது, குண்டுக் வெடித்து சிதறுவது மாதிரியான காட்சிகளை அப்படியே பயன்படுத்திக் கொண்டார்கள். அதோடு கமல் நடிப்பையும் இணைத்தார்கள். நினைத்தது போலவே கிளைமாக்ஸ் பிரமாண்டமாக அமைந்தது. இந்தி படத்தின் கிளைமாக்ஸ் தமிழில் பயன்படுத்தப்பட்டது அதுவே முதல்முறை.