ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'தூங்காவனம்' படத்திற்குப் பிறகு கமல் ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் உருவாக்கும் படம் - 'சபாஷ் நாயுடு'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் பரபரப்பான வேகத்தில் துவங்கின. சபாஷ் நாயுடு படத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட ராஜீவ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன நிலையிலும், தானே இயக்குநராகி ஏறக்குறைய 50% காட்சிகளை ஒரே ஷெட்யூலில் அமெரிக்காவில் படமாக்கிவிட்டுத் திரும்பினார் கமல்.
அடுத்த கட்டப் படப்பிடிப்பை விசாகப்பட்டிணத்தில் நடத்துவதற்கான வேலைகளில் கமல் பிஸியாக இருந்த நேரத்தில், சற்றும் எதிர்பாராமல் கமலுக்கு விபத்து ஏற்பட்டது. காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சரியாகும் வரை குறைந்தது ஒரு மாத காலமாவது ஓய்விலிருக்கும்படி டாக்டர்கள் கமலை அறிவுறுத்தியுள்ளனர். இதன்காரணமாக, 'சபாஷ் நாயுடு' படப்பிடிப்பிற்கு தற்போது தற்காலிகமாக 'பிரேக்' போடப்பட்டுள்ளது. எனவே சபாஷ் நாயுடு படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சபாஷ் நாயுடு படத்தை வெளியிட திட்டமிட்ட தேதியில், ஏற்கெனவே தயாராகி நீண்டநாட்களாக ரிலீஸாகாமல் இருக்கும் 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிட கமல் முடிவு செய்துள்ளாராம். ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் இணைந்து கமல் தயாரித்துள்ள இப்படம் நிதிச்சிக்கல் காரணமாக முடங்கிப்போனது.
தற்போது ஆஸ்கர் ரவிச்சந்திரன் கடனில் இருப்பதால், 'விஸ்வரூபம் 2' படத்துக்கு அவர் செலவு செய்த பணத்தைக் கொடுத்துவிட்டு, லைகா நிறுவனத்துடன் இணைந்து தானே வெளியிட உள்ளார் கமல். லைகா உள்ளே வந்திருப்பதால் ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூடுதல் பணம் கேட்பதாக கூறப்படுகிறது.