வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் அமலாபாலும் தங்களுக்குள் பரஸ்பரம் பேசிக்கொண்டு பிரிந்துவிட்டார்கள் என்கிற செய்தி தான் சில நாட்களாக ஹாட் நியூஸாக இருந்து வருகிறது. ஆனால் இவர்கள் இருவரும் முழு மனதாக பிரியும் முடிவை எடுக்கவில்லை என்றும், சூழ்நிலை காரணமாக இந்த முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றும் இப்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் பிரிந்ததன் பின்னணியில் விஜய் குடும்பத்தினர், அமலாபாலுக்கு கொடுத்த பிரஷர் தான் பிரதான காரணமாக இருப்பதாக ஒரு சிலர் சொல்கிறார்களாம்.
விஜய்யை திருமணம் செய்துகொண்ட பின் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்து விடுவதாக அமலாபால் விஜய்யிடம் சொன்னாராம். அதன்படியே முடித்துக் கொடுப்பதற்குள்ளாகவே விஜய்யின் பெற்றோர் அமலாபால் நடிப்பது பிடிக்கவில்லை என்பது போல விமர்சிக்க ஆரம்பித்தார்களாம். ஆனால் விஜய் அமலாபாலுக்கு தொடர்ந்து ஆதரவாகவே இருந்திருக்கிறார்.
அதேசமயம் நல்ல படங்கள் வந்தால் செலக்டிவாக நடிக்கட்டுமா என கேட்ட அமலாபாலுக்கு ஒகே சொன்னதும் கூட விஜய் தானாம். ஒரு பக்கம் விஜய் ஊக்கம் கொடுக்க, இன்னொரு பக்கம் அவரது பெற்றோர்கள் இதை முற்றிலும் எதிர்த்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுவுமில்லாமல் அமலாபால் தங்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்றும் விஜய்யிடம் புகார் பத்திரம் வாசித்தார்களாம்.
அமலாபாலால் ஒருகட்டத்திற்கு மேல் அவர்களது நடவடிக்கைகளை ஏற்கமுடியாமல் போனதால், இதுபற்றி விஜய்யிடம் முறையிட்டாராம். அமலாபாலை சமாதானம் செய்த விஜய்யை அவரது பெற்றோர்கள் கண்டித்தார்களாம்.. இரண்டு பக்கமும் பேலன்ஸ் பன்ன முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த விஜய்யின் நிலையை பார்த்தும், தன்னால் அவர்களது குடும்பத்தில் பிளவு வேண்டாம் என்பதாலும் தன்னாலும் இனி அவர்களை அட்ஜஸ்ட் பண்ணி போகமுடியாது என்பதாலும் தான் அமலாபால் பிரிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. பிரிந்துபோகும் முடிவுக்கு வந்த பின்னர் தான் தனுஷின் 'வடசென்னை' படத்தை அமலாபால் ஒப்புக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.