டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நான்ஈ படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் சுதீப். அதையடுத்து விஜய் நடித்த புலி படத்தில் நடித்தார். தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள முடிஞ்சா இவனை புடி -என்ற படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இதையடுத்தும் தொடர்ந்து தமிழில் நடிப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். அதோடு, ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணசித்ரம் என எந்தமாதிரியான வேடம் கிடைத்தாலும் தான் நடிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.
மேலும், தமிழில் விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டேன். அடுத்து அஜித்துடன் நடிக்க மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறும் சுதீப், மற்ற நடிகர் நடிகைகளை மதிக்கும் அஜித்தின் கேரக்டர் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. முக்கியமாக, ஒரு ஹீரோ இந்த மாதிரிதான் நடிக்க வேண்டும் என்கிற வட்டத்திற்குள் சிக்காமல், சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடித்து என்னை மட்டுமின்றி பெருவாரியான இந்திய நடிகர்களை கவர்ந்திருப்பவர் அஜித். அதனால், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது என்கிறார் சுதீப்.