ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் கன்னட திரைப்பட விழா நேற்று தொடங்கியது வருகிற 31ந் தேதி வரை 4 நாட்கள் இந்த விழா நடக்கிறது. இதில் கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற, பரவலாக பாராட்டப்பட்ட 12 படங்கள் திரையிடப்படுகிறது.
ரஷியன் கலாச்சார மையத்தில் நேற்ற துவக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை சரோஜாதேவி பேசும்போது: கன்னட மக்களும், தமிழ மக்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். கன்னடத்தில் இருந்து வந்த என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர்கள் தமிழக ரசிகர்கள். இப்போதும் பலர் கன்னடத்தில் இருந்து தமிழில் நடிக்க வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக மக்கள் ஆதரவளித்து வருகிறார்கள். அதேபோல கன்னட படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் பலரிடம் பேசிப் பார்த்ததில் அவர்கள் கன்னட படம் பார்க்க தயராக இருக்கிறார்கள். எனவே இங்குள்ள சினிமா சங்கங்கள் கன்னட படங்களை இங்கு திரையிட ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்றார்.