அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தெலுங்குத் திரையுலகத்திலிருந்து தமிழ்த் திரையுலகத்திற்கு நேரடித் தமிழ்ப் படம் மூலம் மகேஷ் பாபு அறிமுகமாக உள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக உள்ளது. தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள ரகுல் ப்ரீத் சிங் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். வில்லனாக இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைக்கிறார்.
மற்ற இளம் தெலுங்கு நடிகர்களை விட நன்றாகவே தமிழ் பேசும் நடிகர் மகேஷ்பாபு. சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவர். மகேஷ் பாபு நடித்து தெலுங்கில் ஹிட்டான படங்கள் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு இங்கும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. இப்போது அவரே நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பதால் இங்குள்ள முன்னணி ஹீரோக்களான அஜித், விஜய், சூர்யா ஆகியோருக்கு போட்டியாக வருவார் என எதிர்பார்க்கலாம். அழகு, நடிப்பு, ஆக்ஷன் என மூன்றிலுமே மற்றவர்களை விட மகேஷ் பாபு கொஞ்சம் திறமையானவர் என்று தாராளமாகச் சொல்லலாம்.
படம் வெளிவரும் போது மட்டுமே எப்படி அமையப் போகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். அதற்கு அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டும்.