தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மதயானைக்கூட்டம், கிருமி போன்ற படங்களில் நடித்தவர் கதிர். தற்போது சிகை, என்னோடு விளையாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சிகை படத்தில் ஒரு திரில்லர் கதையில் நடித்துள்ளார் கதிர். ஒரேநாளில் நடக்கும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை காக்கா முட்டை மணிகண்டனிடத்தில் அசோசியேட்டாக ஒர்க் பண்ணிய ஜெகதீசன் சுப்பு இயக்கியிருக்கிறார்.
இந்த படம் குறித்து கதிர் கூறுகையில், இந்த சிகை படம் முற்றிலும் மாறுபட்ட கதையில் உருவாகியிருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் இந்த திரில்லர் படத்தில் நான் சில நிமிடங்கள் பெண் வேடத்திலும் நடித்துள்ளேன். அது கதையின் ஒரு முக்கிய டுவிஸ்டாக இருக்கும். அதோடு சமூகத்துக்கு நல்லதொரு மெசேஜ் சொல்லக்கூடியதாக இந்த படம் அமைந்திருக்கிறது என்று கூறும் கதிர், தற்போது இறுதிகட்ட பணிகள் நடக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் சிகை படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்.