தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த சகோதரியும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தயாருமான ரெஹைனா அடிப்படையில் ஒரு பாடகி. ஆரம்பத்தில் தன்னுடைய தம்பியின் இசையில் கோரஸ் பாடி வந்தார். பின்னர், ஸோலோவாக சில பாடல்களையும் பாடினார்.
குறிப்பாக மல மல மருதமலை என்ற சூப்பர்ஹிட் பாடலைப் பாடியவர் இவர்தான். பாடகியான இவர் திடீரென துஷ்யந்த் ஹீரோவாக நடித்த 'மச்சி' என்ற படத்துக்கு இசையமைத்தார். பிறகு, 'ஆடாத ஆட்டமெல்லாம்', 'என்னை ஏதோ செய்து விட்டாய்' உட்பட சில படங்களுக்கும் இசை அமைத்திருக்கும் ரெஹைனாவுக்கு தற்போது தயாரிப்பாளராகும் ஆசை வந்துள்ளது.
'யோகி அன்ட் ஃப்ரெண்ட்ஸ்' எனற பட நிறுவனத்தை தொடங்கி 'ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை' என்ற படத்தை தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இப்படத்தில் அசார் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். வம்சி ஒளிப்பதிவு செய்கிறார்.
சென்னை, பாண்டிச்சேரி, மரக்காணம் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ள 'ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை' காமெடி கலந்த ஃபேண்டசி காதல் திரைப்படமாம்!
'ஏன்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கலை' படத்தின் தயாரிப்புக்கு வெளிநாட்டில் உள்ள ரெஹைனாவின் சில நண்பர்கள் பைனான்ஸ் செய்துள்ளனர். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் தன்னுடைய மகன் ஜி.வி.பிரகாஷ் குமாரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரெஹைனா.