வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கவுதமி மீண்டும் நடிப்பில் பிசியாகிவிட்டார். பாபநாசம் படத்திற்கு பிறகு தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தயாராகியிருக்கும் 'நமது' படத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பாபநாசம் படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. எனக்கேற்ற கதைகளாக அமையவில்லை. அக்கா, அண்ணி மாதிரியான முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிக்கவும் விருப்பமில்லை. 120 படத்துக்குமேல் நடித்து விட்டேன். அப்போதும் சரி, இப்போதும் சரி எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். பணத்துக்காகவோ, கட்டாயத்தின் பேரிலோ நடிக்க மாட்டேன்.
எனக்கு நான் தான் ரசிககை விமர்சகி எல்லாம். என் நடிப்பை நானே விமர்சனம் செய்து கொள்வேன். மற்றவர்களின் விமர்சனம் பற்றி கவலைப்பட படமாட்டேன். மீண்டும் நடிக்க வந்திருப்பது என் மகளுக்கும், கமலுக்கும் சந்தோஷம். இருவருமே என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். என் மகள் சுபலட்சுமி தற்போது பிளஸ் 2 படிக்கிறாள். அவளுக்கு நடிப்பை விட படம் இயக்குவதில் தான் ஆர்வம் இருக்கிறது. நானும் நிறைய படங்களில் நடித்து விட்டேன். படம் தயாரிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வந்திருக்கிறது. விரைவில் அது நடக்கும் என்றார்.