டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'மேல்நாட்டு மருமகள்' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதில் மேல்நாட்டு மருமகளாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை ஆண்ட்ரீயன் நடிக்கிறார். ராஜ்கமல் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர வி.எஸ்.ராகவன், அஞ்சலிதேவி, அசோக்ராஜ், சாத்தையா நடிக்கிறார்கள். கவுதம் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார், கிஷோர் குமார் இசை அமைக்கிறார். புதுமுகம் எம்.எஸ்.எஸ் இயக்குகிறார்.
“எல்லோருக்கும் வெளிநாட்டுக்குச் சென்று கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் ஹீரோவுக்கு ஒரு வெளிநாட்டு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாக வேண்டும் என்பதுதான் கனவு. அதனால் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் நாயகியை அவர் போகும் இடமெல்லாம் சென்று அவருக்கு உதவிகள் செய்து மனதில் இடம் பிடிக்கிறார். இருவரும் காதலித்தார்களா?, கல்யாணம் பண்ணிக் கொண்டார்களா? என்பதுதான் கதை” என்கிறார் இயக்குனர் எம்.எஸ்.எஸ்.