தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'குற்றம் கடிதல்' படத்தில் ஆசிரியையாக நடித்து எல்லோரையும் கவர்ந்தவர் ராதிகா பிரசித்தா. தியேட்டர் ஆர்ட்டிஸ்டான அவர் 'குற்றம் கடிதல்' மூலம் சினிமாவுக்கு வந்தார். தற்போது விஜய் மில்டன் இயக்கும் 'கடுகு' படத்தில் நடித்து வருகிறார். இதிலும் ஆசிரியை வேடம்தான். ஆனால் இரண்டும் ஒரே மாதிரி இருக்காது என்கிறார் ராதிகா.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ‛‛ஒரு ஆசிரியர் வெறும் ஆசானாக மட்டுமில்லாமல், அந்த குழந்தைகளுக்கு தாயாகவும் செயல்பட வேண்டும் என்பதை மிக அழகாக ரசிகர்களுக்கு உணர்த்திய படம்குற்றம் கடிதல். அந்த படத்தில் டீச்சராக நடித்தேன், தற்போது இரண்டாவது முறையாக நான் டீச்சர் வேடத்தில் நடிப்பதால், என்னுடைய குற்றம் கடிதல் கதாப்பாத்திரத்தின் சாயல் சிறிதளவும் இருக்க கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தேன். அதற்காக எனது உடல் எடையையும் அதிகரித்துள்ளேன். நிச்சயம் எனது கடுகு படத்தின் இந்த டீச்சர் கதாப்பாத்திரம் எந்த வகையிலும் என்னுடைய குற்றம் கடிதல் டீச்சர் கதாப்பாத்திரத்தோடு ஒத்துப்போகாது.
ஆண் - பெண் உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ளது கடுகு . பொதுவாகவே ஒரு ஆணும், பெண்ணும் பழகினாலே அது காதலாக தான் இருக்க கூடும் என்ற கருத்து மக்களிடம் இருந்து வருகிறது. ஆனால் அதையும் தாண்டி அவர்களிடையே புனிதமான நட்பும் இருக்கிறது. கடுகு படத்தை பார்த்த பின் ரசிகர்கள் அதை உணருவார்கள், என்கிறார் ராதிகா பிரசித்தா.