'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இனிமே இப்படித்தான் படத்தில் சந்தானம் நாயகனாக நடித்தபோது, இனிமேல் அவர் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பார் போலிருக்கு. அதைத்தான் இந்த படத்தின் தலைப்பு மூலம் சொல்லியிருக்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால், அப்படத்தின் ஆடியோ விழாவில், இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதற்காக இந்த டைட்டீலை வைக்கவில்லை. இந்த கதைக்கு இதுதான் பொருத்தமாக இருந்தது. அதனால் டைரக்டர் வைத்திருக்கிறார் என்று சொன்ன சந்தானம், ஹீரோவாக நடித்தாலும் காமெடியனாகவும் நடிப்பேன் என்று அந்த மேடையில் சொன்னார்.
அதன்காரணமாக, அதையடுத்து அஜித்தின் 57வது படம் மற்றும் ஆர்யா நடிக் கும் ஒரு புதிய படத்தில் காமெடியனாக நடிப்பதற்கும் சந்தானத்திடம் பேசியிருந்தனர். அவரும் ஓகே சொல்லியிருந்தார். ஆனால், தில்லுக்குத்துட்டு படத்தின் வெற்றி காரணமாக இனிமேல் காமெடியனாக நடிப்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் சந்தானம். அதனால் அந்த படங்களில் தன்னால் நடிக்க முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லி விலகி விட்டார். இதனால் அஜித்தரப்பு பெரிதாக பீல் பண்ணாதபோதும், ஆர்யாதான் எனது நண்பர் சந்தானம் இப்படி வாக்கு தவறி விட்டாரே -என்று பீலிங்ஸை வெளிப்படுத்தினாராம்.