தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் பிருத்விராஜ் நடிக்க வரும் முன்பே சினிமாவில் நுழைந்தவர்தான் அவரது அண்ணன் இந்திரஜித். ஆனால் பிருத்விராஜை போல, நடித்தால் ஹீரோ என்கிற நிலையை எல்லாம் வளர்த்துக்கொள்ளாமல், தனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஒகே செய்பவர் தான் இந்திரஜித்.. கடந்த 2013ல் மட்டும் பத்து படங்களில் நடித்த இந்திரஜித், அதன்பின் கடந்த இரண்டு வருடங்களில் தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துக்கொண்டுவிட்டார்.. காரணம் நல்ல படங்களை மட்டும் தேர்வுசெய்து நடிக்க வேண்டும் என்பது தானாம்.
கடந்த வருடம் சூப்பர்ஹிட்டான 'அமர் அக்பர் அந்தோனி' படத்தில் தனது சகோதரர் பிருத்விராஜுடன் இணைந்து காமெடி வேடத்தில் கலக்கிய இந்திரஜித், தற்போது 'காடு பூக்குன்ன நேரம்' என்கிற படத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை கண்டறிய காட்டுக்குள் செல்லும் போலீஸ் கான்ஸ்டபிளாக சீரியசான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் நாயகி ரீமா கல்லிங்கல் மாவோயிஸ்ட் கேரக்டரில் நடித்துள்ளாராம். காமெடி, சீரியஸ், அதேசமயம் வில்லன் என எந்த கேரக்டரிலும் தன்னை பொருத்திக்கொள்ள தயாராக இருக்கும் இந்திரஜித், அடுத்ததாக தனது சகோதரர் பிருத்விராஜுடன் இணைந்து 'தியான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.