பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழிலும், தெலுங்கிலும் தங்களது படங்களுக்குப் பொருத்தமான முன்னணி நாயகிகள் கிடைக்க அனைத்து ஹீரோக்களுமே தடுமாறி வருகிறார்கள். டாப் லிஸ்ட்டில் இருக்கும் ஹீரோயின்களுடன் மட்டுமே ஜோடி சேர டாப் ஹீரோக்கள் விரும்புகிறார்கள். இரண்டாம் கட்ட ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஹீரோக்களும் தயங்குகிறார்கள், இரண்டாம் கட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஹீரோயின்களும் தயங்குகிறார்கள். அதனால்தான் இப்படி ஒரு தடுமாற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
தமிழில் அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கு ஜோடி யார் என்பதை இன்னும் முடிவு செய்யாமலே இருக்கிறார்கள். விஜய் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். ஆனால், தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் படத்திற்கு அவருக்கு இன்னமும் ஜோடி கிடைக்கவில்லை. அவர் மகன் ராம் சரண் 'துருவா' படத்தில் மீண்டும் ரகுல் ப்ரீத் சிங்குடன் ஜோடி சேர்ந்துள்ளார். பவன் கல்யாண் அடுத்து நடிக்கும் படத்திற்கு அவருடைய ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை கேட்டுள்ளார்களாம். பவன் கல்யாண், அவருடைய முன்னாள் மனைவி ரேணு தேசாய் தவிர, இதுவரை வேறு எந்த ஹீரோயினுடனும் இரண்டாவது முறை ஜோடி சேர்ந்து நடித்ததில்லையாம். இப்போது ஸ்ருதிஹாசனை மீண்டும் நடிக்க அவர் அழைத்திருப்பதை டோலிவுட்டினர் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்களாம். இருவரும் இணைந்து நடித்த 2012ல் வெளிவந்த 'கப்பர் சிங்' படம் சூப்பர் ஹிட்டான படம். பவன் நடித்து கடைசியாக வெளிவந்த 'சர்தார் கப்பார் சிங்' படம் படுதோல்வியடைந்ததே அதற்குக் காரணம், அதனால் பவனும் சென்டிமென்ட் பார்க்க ஆரம்பித்துவிட்டாராம்.
அப்பா கமல்ஹாசன் இயக்கத்தில் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடிக்கத்தான் ஸ்ருதிஹாசன் அடுத்த மாதம் கால்ஷீட் கொடுத்திருந்தாராம். தற்போது கமல்ஹாசன் கால் ஆபரேஷன் செய்து சிகிச்சையில் இருப்பதால், அடுத்த மாதம் அந்தப் படத்தின் படிப்பிடிப்பு நடைபெற வாய்ப்பில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஸ்ருதியும் பவனுடன் மீண்டும் ஜோடி சேர சம்மதிப்பார் என்கிறார்கள்.