தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வீரம், வேதாளம் படங்களை அடுத்து அஜித்தின் 57-வது படத்தை இயக்கும் சிறுத்தை சிவா, இந்த படத்திற்கான வேலைகளில் கடந்த 6 மாதங்களாக ஈடுபட்டு வருகிறார். கதை விவாதம், ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்த பிறகு சில வெளிநாடுகளுக்கு சென்று லொகேசன் பார்த்து வந்தவர், பின்னர் நடிகர் நடிகை தேர்வில் ஈடுபட்டார். ஜூலை 15ல் படப்பிடிப்பு தொடங்கவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், எதிர்பார்த்தபடி அனுஷ்காவின் கால்சீட் கிடைக்காததால் அதை யடுத்து சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய சிவா, இப்போது காஜல்அகர்வாலை புக் பண்ணியதை அடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் அஜித்தின் 57வது படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல்கட்டமாக பல்கேரியா, ஐரோப்பா போன்ற நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் மற்றும் பாடல்கள் படமாக்கப்பட உள்ளது. அந்த வகையில், 40 நாட்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடக்கிறதாம். இந்நிலையில், டைரக்டர் சிவா உள்பட படக்குழுவினர் இன்று பல்கேரியா நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார்கள். ஆகஸ்ட் 5-ந்தேதி அஜித், காஜல்அகர்வால் உள்ளிட்ட முக்கிய நடிகர் நடி கைகள் இந்தியாவில் இருந்து பல்கேரியாவுக்கு செல்கிறார்களாம்.