டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இது என்ன மாயம் படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு நடித்து வந்த வாகா, வீர சிவாஜி ஆகிய படங்களின் இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. அதையடுத்து முடிசூடா மன்னன் என்ற படத்தில் அவர் நடித்து வந்தார். அஜீத்தின் 57வது படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஆனால் இந்த முடிசூடா மன்னன் படத்தில் விக்ரம் பிரபு 10 நாட்கள் நடிக்க வேண்டியிருந்ததாம். அதற்குள் அவர் நெருப்புடா படத்திற்கு பூஜை போட்டு படப்பிடிப்பையும் தொடங்கியிருந்தார்.
இந்த நேரத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் அஜீத் பட வேலைகளில் இறங்கயிருக் கும் சத்யஜோதி பிலிம்ஸ், அதற்கு முன்னதாக விக்ரம் பிரபு படப்பிடிப்பை முடித்து விட வேண்டும் என்பதற்காக, அவரை அழைத்து, படப்பிடிப்பை முடித் துக்கொடுத்து விடுங்கள் என்று கூறினார்களாம். அதன்காரணமாக, நெருப்புடா படப்பிடிப்பை 10 நாட்களுக்கு நிறுத்தி வைத்து விட்டு, முடிசூடா மன்னனில் தற்போது நடித்து வருகிறார் விக்ரம் பிரபு. இன்னும் 5 நாட்களில் அந்த படத்தில் நடித்து முடித்ததும் மீண்டும் நெருப்புடா படப்பிடிப்பை கலந்து கொள்கிறாராம் விக்ரம் பிரபு.