பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளர்களில் ஈரோடு மகேசும் ஒருவர். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் காமெடியான என்ட்ரியான இவர், பின்னர், விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராகி விட்டார். அந்த வகையில், ஜோடி நம்பர் ஒன் சீசன்-8, நடுவுல கொஞ்சம் டிர்ஸ்டப் பண்ணுவோம், அட்ராசக்க உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர், தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நீதிபதிகளில் தானும் ஒருவராக செயல்பட்டு வருகிறார்.
இப்படி பல டிவி நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்தபோதும், ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை, சிகரம் தொடு, சும்மா நச்சுன்னு இருக்கு போன்ற படங்களில் நடித் தவ ஈரோடு மகேஷ், இப்போது இணையதளம் என்ற படத்திலும் நடிக்கிறார். இதையடுத்தும் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் ஈரோடு மகேஷ்.
அதன்காரணமாக, ஒரு படத்தில் நடித்து முடித்ததும் அந்த ஹீரோக்களுடனான நட்பை அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து வரும் மகேஷ், அவர்களை அவ்வப்போது சந்திக்கவும் செய்கிறார். அதோடு அவர்கள் மூலமாக சில டைரக்டர்களுடன் நட்பு வளர்த்து புதிய படங்களுக்காகவும் முயற்சி செய்து வருகிறார். விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன், மா.கா.பா.ஆனந்த்தைத் தொடர்ந்து அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் பலரும் சினிமாவில் நடித்து வருவதைத் தொடர்ந்து ஈரோடு மகேசுக்கும், சின்னத்திரையைப் போன்று சினிமாவிலும் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறதாம். அதனால், ஹீரோக்களுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக நடிப்பதற்காக முயற்சி செய்து வருகிறார்.