சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சமீபத்தில் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாய் உலகம் முழுக்க வெளியாகியிருக்கும் படம் ‛கபாலி'. இப்படம் டீசர் தொடங்கி, வியாபாரம், ரிலீஸான விதம், வசூல் என எல்லாமே வியப்பான ஒன்று தான். இந்நிலையில், அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வந்த ரஜினி, நேற்று முன்தினம் இரவு சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய ரஜினி, ‛கபாலி' படத்தை வெற்றி படமாக்கியதற்கு இன்று(ஜூலை 26-ம் தேதி) நன்றி என தெரிவித்துள்ளார்.
ரஜினி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது... என்னை வாழ வைக்கும் தமிழக மக்களாகிய அனைவருக்கும் என்னுடைய வணக்கங்கள். ‛லைக்கா' தயாரிப்பில், ஷங்கரின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகும் ‛2.0' மற்றும் நண்பர் தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான வித்தியாசமான இயக்கத்தில், மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட ‛‛கபாலி'' படத்தில் ஓய்வில்லாமல் நடித்ததின் காரணமாக கொஞ்சம் உடம்பிற்கும், மனதிற்கும் ஓய்வும் தேவைப்பட்டது. அதையொட்டி இரண்டு மாதங்கள் என்னுடைய மகள் ஐஸ்வர்யா தனுஷூடன் ஓய்வு எடுத்து, மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நலமாகவும், ஆரோக்கியமாகவும், மிக உற்சாகமாக தாய் மண்ணிற்கு திரும்பிய எனக்கு ‛கபாலி' படத்தின் மிகப்பெரிய வெற்றி செய்தியை அமெரிக்காவில் கேள்விப்பட்டதை இன்று நேரடியாக பார்த்து, உணர்ந்து, மிக்க சந்தோஷத்தில் இருக்கிறேன்.
இப்படத்தை தயாரித்த என்னுடைய நீண்டகால நெருங்கிய நண்பர் தாணு, இயக்கிய ரஞ்சித், அவருடைய குழு, சக நடிகர், நடிகையர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கிய என்னுடைய அன்பு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், இளைஞர்களுக்கும், முக்கியமாக தாய்மார்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தலை வணங்கி என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மகிழ்ச்சி!
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.