தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனது கவர்ச்சியினால் தென்னிந்திய சினிமாவை கலக்கி வந்தவர் நயன்தாரா. ஆனால் சமீபகாலமாக அவர் கவர்ச்சிக்கு குட்பை சொல்லிவிட்டு பர்பாமென்ஸ் ரோல்களை செலக்ட் பண்ணி நடித்து வருகிறார். மேலும், மாயா, நானும் ரெளடிதான் படங்களுக்குப்பிறகு விக்ரமின் இருமுகன் படத்திலும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. அதுவும் அவர் நீண்டகாலமாக ஆவலுடன் எதிர்பார்த்து வந்த போலீஸ் வேடத்திலேயே நடித்துள்ளார். அதோடு சண்டை காட்சியிலும் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்த வகையில், இந்த படத்தில் நயன்தாராவை சில படங்களில் விஜயசாந்தி நடித்தது போன்று கெத்தான நடிப்பை வெளிப்படுத்த வைத்திருக்கிறாராம் இயக்குனர் ஆனந்த்சங்கர். அதுமட்டுமின்றி, நயன்தாராவும் ரியல் போலீசாகவே மாறி ஆக்சன் ஹீரோயினிக்குரிய தில்லான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால், இதற்கு முன்பு நயன்தாரா நடித்த சில படங்களில் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலும், இந்த இருமுகன் படத்தில் அவர் நடித்துள்ள கேரக்டர்தான் அந்த பட்டத்துக்கு பொருத்தமான கதாபாத்திரமாகஅமைந்திருப்பதாக அப்படக்குழுவினர் சொல்கிறார்கள்.