இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
‛பாஜிராவ் மஸ்தானி' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி' படத்தை இயக்க உள்ளார். மீண்டும் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடி இணைகிறது. இதுவும் சரித்திரகால படம் தான். இப்படத்தில் இவர்கள் இருவர் தவிர இன்னொரு முக்கிய ரோலும் உள்ளது. அதாவது தீபிகாவின் கணவர் ரோலில் நடிக்க ஒரு நடிகர் தேவை, அதனால் இப்படத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர் பவாத் கானை நடிக்க கேட்டுள்ளார், அவரும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். இப்படத்தில் ரன்வீர் சிங், அலாவுதீன் கில்ஜி வேடத்திலும், தீபிகா பத்மாவதி ரோலிலும், அவரது கணவராக பவாத் கானும் நடிக்க உள்ளனர். பாஜிராவ் மஸ்தானி படத்தை காட்டிலும் இப்படம் இன்னும் பிரமாண்டமாய் உருவாக இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் லீடு ரோலில் நடிக்க உள்ள இந்த மூவரிடமும் சுமார் 200 நாட்கள் சஞ்சய் லீலா பன்சாலி கால்ஷீட் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தை ஆரம்பிக்க இருக்கும் இயக்குநர், அடுத்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்.