தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்டுடியோக்ரீன் தயாரிப்பு நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த பிரபு, சகுனி' படத்தின் மூலம் தயாரிப்புத் துறையில் தனி ஆவர்த்தனம் தொடங்கினார். 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' என்ற படநிறுவனம் தொடங்கி கார்த்தி நடிப்பில் சகுனி படத்தைத் தயாரித்தார். அதன் பிறகு இப்போது 'காஷ்மோரா' படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.
அதோடு அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் 'அருவி' என்ற சமூக அக்கறை கொண்ட படத்தையும் தயாரித்து வருகிறது 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்'. இவ்விரு படங்களுடன் 'குக்கூ' ராஜுமுருகன் இயக்கத்தில் 'ஜோக்கர்' என்ற படத்தையும் தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.
'ஆரண்யகாண்டம்' புகழ் குரு சோமசுந்தரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தின் அனைத்துகட்ட வேலைகளும் முடிவடைந்து பல மாதங்களாக ரிலீஸுக்குக் காத்திருந்தது. கபாலி படத்துக்கு வழி விட்டு ஒதுங்கியிருந்த ஜோக்கர் படம் விரைவில் ரிலீஸாகிறது. ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவாகி வெளிவந்த 'ஜோக்கர்' படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், அரசியல் மற்றும் விழிப்புணர்வு வசனங்களை உள்ளடக்கிய இப்படத்தின் சென்சார் கடந்த வாரம் நடைபெற்றது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யு' சான்றிதழ் வழங்கினர். ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வருகிறது.