தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் ஹேண்ட்சம் நடிகரான ஜான் ஆபிரஹாம், தற்போது டிஸ்யூம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஜான் ஆபிரஹாமுடன் வருண் தவானும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். வருகிற ஜூலை 29ம் தேதி டிஸ்யூம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார் ஜான் ஆபிரஹாம். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பாக்ஸ் ஆபிஸ் பற்றி தான் என்றும் கவலைப்பட்டது கிடையாது என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛ஒரு படம் தோல்வியடைந்தால் அது தன்னை சேராது, வெற்றியடைந்தால் தன்னை சேரும் என்று சொல்ல முடியாது. ஆனால் வெற்றி, தோல்வி தவிர்க்க முடியாத ஒன்று தான். ஒரு நடிகரின் நட்சத்திர அந்தஸ்து மற்றும் அவர்களின் புகழை மட்டும் வைத்து இது கணக்கிடப்படுகிறது என்று சொல்லிவிட முடியாது. என்னைபொறுத்தமட்டில் நான் பாக்ஸ் ஆபிஸை பற்றி கவலைப்படுவது கிடையாது. ஒவ்வொரு படத்திலும் நடிக்கும் போது கதையை தான் பார்ப்பேன். வெற்றி, தோல்வி என்னை எந்த விதத்திலும் பாதிக்காது'' என்று கூறியுள்ளார்.