ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
தெலுங்குத் திரையுலகத்தைப் போலவே, தமிழ்த் திரையுலகத்திலும் வாரிசு நட்சத்திரங்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். தயாரிப்பாளரின் மகன், இயக்குனரின் மகன், நடிகரின் மகன், நடிகையின் மகன் என பலரும் திரையுலகத்தில் நடிகர், நடிகைகளாக இருந்து வருகிறார்கள். என்னதான் வாரிசாக இருந்தாலும் அவர்களிடம் திறமை இருந்தால் மட்டுமே நீடித்திருக்க முடியும் என்பதை பலருக்கும் ரசிகர்கள் புரிய வைத்திருக்கிறார்கள். அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோருக்கு தற்போது இருக்கும் வரவேற்புக்குக் கூட அவர்கள் யாருடைய வாரிசாகவும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கிறது.
தமிழ்த் திரையுலகத்தோடு ஒப்பிட்டால் தெலுங்கில் சில நட்சத்திரக் குடும்பத்தினரின் ஆதிக்கம் அங்கு அதிகமாகவே உள்ளது. அதை மீறி ஒரு சில நடிகர்கள் மட்டுமே மேலே உயரும் நிலை தற்போது உள்ளது. அப்படி ஒரு நட்சத்திரக் குடும்பத்து வாரிசாக இருப்பவர் நடிகர் வெங்கடேஷ். கடந்த 30 வருடங்களாக ஹீரோவாக இருந்து கொண்டிருக்கிறார். அவரும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கும் 'பாபு பங்காரம்' படத்தின் இசை வெளியீடு நேற்று நடந்தது. அப்போது பேசிய அவர் எனது மகன் நடிகராக அறிமுகமானதும் நான் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என்றார். வேறு எந்த தெலுங்கு ஹீரோவும் சொல்லாத ஒரு விஷயத்தை வெங்கடேஷ் சொல்லி ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு சிரஞ்சீவி மீண்டும் கதாநாயகனாக நடிக்க வந்துள்ள நிலையில் வெங்கடேஷின் இந்த அறிவிப்பு அவர் காலத்து ஹீரோக்களையும் யோசிக்க வைத்தால் சரி.