ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜி.என்.குமரவேலன் இயக்கும் படம் 'வாகா'. விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். கன்னடத்தில் சுதீப் ஜோடியாக 'மாணக்யா' படத்தில் அறிமுமான ரன்யா இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். இது ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரனுக்கும், காஷ்மீர் பெண்ணுக்குமான காதலை சொல்லும் படம். இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில் படமாகி உள்ளது.
படத்தின் ஹீரோயின் ரன்யா பெங்களூரைச் சேர்ந்தவர் அதனால் நன்றாக தமிழ் பேசுவார். 'வாகா' படத்திலும் நானே டப்பிங் பேசுகிறேன் என்றார். அதற்கு ஒப்புக் கொண்ட இயக்குனர் அவரை பேச அனுமதித்தார். ரன்யாவும் டப்பிங் பேசினார். பின்னர் அவர் பேசிய காட்சிகளை போட்டு கேட்டபோது அதில் லேசான கன்னட வாடை இருந்தது. இதனால் அந்த கேரக்டரின் தன்மை குறைவதாக கருதிய இயக்குனர் குமரவேலன் ரன்யாவின் டப்பிங்கை நீக்கிவிட்டு வேறொரு தொழில்முறை டப்பிங் கலைஞரை பேச வைத்தார்.
கதைப்படி ரன்யா தமிழ்நாட்டிலிருந்து சென்று காஷ்மீரில் செட்டிலான குடும்பத்து பெண் கேரக்டர் என்பதால் அவரது தமிழ் பேச்சு சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் என்கிறது தயாரிப்பு வட்டாரம்.