ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மான் வேட்டையாடியது தொடர்பாக நடிகர் சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கில், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது ராஜஸ்தான் ஐகோர்ட். பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவர், நடிகர் சைப் அலிகான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே, போன்றோர் 1998-ல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றனர்.
அப்போது நடிகர் சல்மான்கானும் படப்பிடிப்பு குழுவினரும் இரு அபூர்வ இன மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக ஜோத்பூர் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சல்மான் கான் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரைணகள் எல்லாம் முடிந்து தீர்ப்பு மட்டும் வழங்கப்படாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு ராஜஸ்தான் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சல்மானை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சல்மான்கானுக்கு இந்த வழக்கிலிருந்து பெரிய தீர்வு கிடைத்துள்ளது.
முன்னதாக குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவரை கொன்றதாக சல்மான் மீது தொடரப்பட்ட வழக்கிலும் அவர் விடுதலையானது குறிப்பிடத்தக்கது.