'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காமெடியனாக அறிமுகமான கருணாகரன் தற்போது ஹீரோவாக பிசியாகிவிட்டார். சமீபத்தில் 'கண்ணீர் அஞ்சலி' என்ற படத்தில் ஹீரோக நடிக்க ஆரம்பித்தார். தற்போது 'பொதுநலன் கருதி' என்ற படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். அஸ்மிதா ஹீரோயின். இவர்கள் தவிர ஆதித் அருண், சந்தோஷ், யோக்ஜேபி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள். சுவாமிநாதன் ஒளிப்பதிவு செய்கிறார், ஹரீஷ் கணேஷ் இசை அமைக்கிறார். 'மரியான்' இயக்குனர் பரத்பாலா உதவியாளர் சீயோன் இயக்குகிறார்.
“பிழைப்பு தேடி பல்வேறு இடங்களிலிருந்து சென்னை வரும் 4 இளைஞர்களின் கதை. அந்த இளைஞர்கள் சென்னை வர காரணம் என்ன? சென்னையில் அவர்களுக்கு எந்த மாதிரியான வாழ்க்கை கிடைக்கிறது. அதை அவர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது கதை. குடும்ப பிரச்சினையிலிருந்து உலக மயமாக்கல் வரை பேசுகிறது படம். எளிய மனிதர்களின் கதை என்பதால் அதற்கேற்ற நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்” என்றார் இயக்குனர் சீயோன்.