ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கருப்பு வெள்ளை சினிமா காலம் தொட்டே சிறு சிறு காமெடி வேடங்களில் நடித்து வந்தவர் 'பசி' நாராயணன். 'பசி' படத்தில் சிறப்பாக நடித்ததன் மூலம் 'பசி' நாராயணன் என்று அழைக்கப்பட்டார். அன்பேவா, ஆயிரத்தில் ஒருவன், உள்பட 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அவர் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தினர் வறுமையில் வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியானது. இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா 'பசி' நாராணயன் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். “இந்த நிதி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு மாதம் தோறும் வட்டித் தொகையாக கிடைக்கும் 8,125 ரூபாய் 'பசி' நாராயணன் குடும்பத்துக்கு வழங்கப்படும்” என்று அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசி நாராயணனின் குடும்பம் இந்த தொகையை கொண்டு தங்கள் பசியை தீர்த்துக் கொள்ள வேண்டும்.