விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
இப்போதெல்லாம் ஆண்டுக்கு 50 டப்பிங் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஜாக்சிசானும், ஜேம்ஸ் பாண்டும்கூட டப்பிங் பேசுகிறார்கள். இந்த டப்பிங் படத்தை தமிழில் தொடங்கி வைத்தவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். படம் 'ஹரிச்சந்திரா'. தொழில்போட்டியில்தான் டப்பிங் படம் தமிழுக்கு வந்தது. அந்த விபரம் வருமாறு:
1944ம் ஆண்டு கன்னடத்தில் ஹரிச்சந்திரா என்ற படம் வெளியானது. ஆர்.ராகவேந்திராவ் இயக்கினார். நாகேந்திரராவ், கமலா நடித்திருந்தனர். இந்த படத்தால் கவரப்பட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியார். கன்னட 'ஹரிசந்திரா'வை தமிழில் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்குள் பி.யூ.சின்னப்பா கண்ணாம்பாள் நடிப்பில் தமிழில் 'ஹரிச்சந்திரா' படத்தை ஆரம்பித்து விட்டார் இயக்குனர் நாகபூஷணம். இது ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அப்போது ஹாலிவுட்டில் பிரஞ்சு மொழி படங்களை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்ட செட்டியார் ஒரு வேலை செய்தார்.
தமிழ் 'ஹரிச்சந்திரா' தயாரிப்பில் இருந்தபோதே கன்னட 'ஹரிச்சந்திரா'வை ரகசியமாக தமிழில் டப் செய்தார். அவரது பிரகதி ஸ்டூடியோவில் பரம ரகசியமாக இதனைச் செய்தார். ஒலிப்பதிவாளர் சீனிவாசராகவனும், வசனகர்த்தா ஏ.டி.கிருஷ்ணசாமியும் இணைந்து டப் செய்தார்கள். தமிழ் 'ஹரிச்சந்திரா' வெளிவருதற்கு முன்பே கன்னட டப்பிங் 'ஹரிச்சந்திராவை' வெளியிட்டார் ஏவி.மெய்யப்ப செட்டியார். படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகு வெளிவந்த தமிழ் 'ஹரிச்சந்திரா' தோல்வி அடைந்தது. தமிழின் முதல் டப்பிங் படம் என்ற பெயரை 'கன்னட ஹரிச்சந்திரா' பெற்றது.