பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆச்சர்யங்கள், சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும், சேதுபூமி ஆகிய படங்களில் நடித்தவர் தமன் குமார். இதில் சேதுபூமியை அவர் ரொம்பவே எதிர் பார்த்தார். ஆனால் அந்த படமும் தோல்வியடைந்து அவரை ஏமாற்றிவிட்டது. இந்த நிலையில், தற்போது, நடிகை அக்சயா இயக்கி, தயாரித்து நடித்து வரும் யாழி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் தமன். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதை என்றாலும், இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன், இந்த படம் தனக்கு வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கிறார்.
மேலும், இதுவரை ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கூறி வந்த தமன், அடுத்தபடியாக நெகடீவ் வேடங்களில் நடிப்பதற்கும் தான் தயாராகி விட்டதாக சொல்கிறார். சினிமாவில் ஹீரோவாக இடம் பிடித்து விட வேண்டும் என்று பல படங்களில் நடித்தேன். ஆனால் எதிர்பார்த்த இடம் கிடைக்கவில்லை. அதனால் அடுத்தபடியாக நெகடீவ் வேடங்களில் நடிக்கும் முடிவில் இருக்கிறேன். அப்படி நான் வில்லனாக நடிக்கும் படம் வெற்றி பெற்றால் அதன்பிறகு ஹீரோ, வில்லன் என இரண்டுவிதமான வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்கிறார் தமன் குமார்.