ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
நடிகர் சன்னி லியோன் மீது டில்லி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், கபடி போட்டி தொடரின் துவக்க விழாவில் சன்னி லியோன், தேசிய கீதத்தை தவறாக பாடியதாக கூறப்பட்டுள்ளது. சிந்த் என்ற வார்த்தைக்கு பதிலாக சிந்து என சன்னி லியோன் பாடியதாக கூறப்பட்டுள்ளது. தற்போது சன்னி லியோன் துபாயில் இருந்து வருகிறார். இந்த புகார் பற்றி சன்னி லியோனிடமே கேட்டோம். அதற்கு அவர், இது என்னை மிகவும் வேதனைபட வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக நான் கடினமாக உழைத்தேன். எந்த நிகழ்ச்சியை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனது ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு செயலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எந்தவொரு விஷயத்திற்குமே எப்போதும் எதிர்ப்பு இருக்கும் என தெரியும். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது. என்னை வெறுப்பவர்கள் சுற்றிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் செயல்களை உங்களால் தடுக்க முடியாது. எனது அணியினரும், எனது குடும்பத்தாரும் என்னுடன் இருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. என்னை வெறுக்கும் அத்தகைய நபர்களால் இப்போது வரை என்னை வீழ்த்த முடியவில்லை. அதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.