‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாளைக்(ஆகஸ்ட் 22) வெகு விமர்சையாகக் கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடுகளை தற்போதிலிருந்தே கவனிக்க துவங்கி விட்டனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரு வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி தற்போது நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தந்தையின் பிறந்த நாளன்று தனது புதிய படம் ஒன்றை துவக்க ராம் சரண் திட்டமிட்டிருந்தார். ஆனால் இயக்குனர் சுகுமார் திரைக்கதை அமைக்கும் பணிகளை முடிக்காததால் அப்படத்தை செப்டம்பரில் துவங்க ராம் சரணிடம் இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளாராம். இதனால் தற்போது நடித்து வரும் துருவா படத்தின் பாடல் ஒன்றை ஆகஸ்ட் 22ல் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம் ராம் சரண். தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான துருவா படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைக்கின்றார்.