டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் கடந்த 22ந் தேதி வெளிவந்தது. கர்நாடக மாநிலத்தில் சுமார் 300 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்த நிலையில் கபாலி படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி, கன்னட வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த போராட்டங்களுக்கு வாட்டாள் நாகராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் “கர்நாடகத்திற்கு துரோகம் செய்யும் ரஜினி ஒழிக” என்ற கோஷத்தை எழுப்பினர். அதோடு ரஜினி உருவபொம்மை, மற்றும், கபாலி பட போஸ்டர்களை தீயிட்டு கொழுத்தினர். இதனை போலீசார் வேடிக்கை பார்த்தனர்.
போராட்டம் குறித்து வாட்டாள் நாகராஜ் கூறும்போது: ரஜினி கர்நாடகாவில் பிறந்தாலும் அவர் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாகவும், கன்னடர்களுக்கு எதிரானவராகவும் இருக்கிறார். காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டை ஆதரிக்கிறார். 300 தியேட்டர்களில் 'கபாலி' படம் வெளியிடப்படுவதன் மூலம் கன்னட படங்கள் நசுக்கப்படுகிறது. கன்னட சினிமாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதற்காகவே போராட்டம் நடத்துகிறோம். என்றார்.