ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை ஐஸ்வர்யராய் கோடை விடுமுறையை கழிக்க தன் தாய் விருந்தாராய் மற்றும் மகள் ஆராத்யாவுடன் லண்டன் சென்றிருந்தார். விடுமுறையை முடித்துக் கொண்டு நேற்று அவர் மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தின் வெளியே அவரது மெய்காப்பாளர்கள் அவருக்காக காத்திருந்தனர்.
விமான நிலையத்திற்குள் ஐஸ்வர்யாராய் நடந்த வருவதை பார்த்த பயணிகள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்டனர். கையில் குழந்தையை வைத்திருந்த அவரால் ஆட்டோகிராப் போட முடியவில்லை. இதற்குள் நிறைய கூட்டம் சேரவே அவசர அவசரமாக வெளியேறினார். வெளியே நின்றகூட்டம் அவரை முற்றுகையிட்டது. அப்போது ஓடிவந்த பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக காருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது முண்டியடித்த ஒரு ரசிகரை பாதுவாவலர் இடித்து தள்ள அவர் ஐஸ்வர்யா ராயின் அம்மா மீது சாய... அம்மா விருந்தாராய் தரையில் விழுந்தார். இதற்குள் காருக்கு சென்று விட்ட ஐஸ்வர்யா அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு குழந்தையை அவசரமாக காரின் பின் சீட்டில் வைத்து கதவை வேகமாக சாத்தினார். இதனால் காரின் கதவு பட்டு குழந்தை அலறியது. “ஏன் இப்படி பண்றீங்க. நானும் உங்களை மாதிரி ஒரு மனுஷிதானே” என்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் கத்தினார். பின்னர் அம்மாவுடன் காரில் ஏறி பறந்தார். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.