அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விபத்தில் ஒரு காலை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடும், தளராக உழைப்போடும் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் சுதா சந்திரன். 'மயூரி' என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த அவர் அதில் தன் சொந்த வாழ்க்கை கதையிலேயே நடித்தார். பின்னர் இந்தி சீரியல்களில் பிசியான நடிகையானார். 'தெய்வம் தந்த வீடு' சீரியல் முலம் தமிழ் சீரியலுக்கும் வந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை சில காலம் நடத்தி வந்தார். சேனல் நிர்வாகத்துக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே நிகழ்ச்சியிலிருந்து விலகினார். சுதா சந்திரன் கையில் இப்போது சீரியல்கள் எதுவும் இல்லை என்றாலும் அவர் இந்தியில் நடித்த பிரபலமான தொடரான 'நாகினி' தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த இடைவெளியில் தான் நடத்தி வரும் நடன பள்ளிகளில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார். 'சுதாசந்திரன் டான்ஸ் அகாடமி' என்ற பெயரில் மும்பை அந்தேரி, நாக்பூர் மற்றும் சென்னை போரூரில் இந்த நடன பள்ளிகள் இயங்குகிறது. இங்கு பரதநாட்டியம் முதல் மேற்கத்திய நடனம் வரை கற்றுத் தரப்படுகிறது. 5வயது முதல் 50 வரையிலானவர்கள் நடனம் கற்று வருகிறார்கள். போரூர் தவிர்த்து சென்னையில் மற்றுமொரு இடத்தில் நடன பள்ளி துவங்கும் திட்டத்தில் இருக்கிறார். தற்போத நடன பள்ளிகளை மேம்படுத்த மும்பைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.