‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகருமான ராம் சரண், தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகின்றார். தெலுங்கில் துருவா என பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். துருவா படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக இருக்கும் ராம் சரண், கபாலி படம் பார்க்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார். நேற்று திரைக்கு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களிலும் வசூலை அள்ளி வருகின்றது.
திரை உலகில் உச்சக்கட்ட கொண்டாட்டமாக பார்க்கப்பட்ட கபாலி திரைப்பட வெளியீட்டிற்கு நடிகர் ராம் சரணும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டிருக்கும் ராம் சரண் கபாலி படத்தைப் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். டோலிவுட்டின் பிரம்மாண்ட வெற்றியாக அறியப்பட்ட பாகுபலி படத்தின் முதல் நாள் வசூலை கபாலி முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலியும் கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தவறவிட்டுவிட்டதாக வருத்ததுடன் கூறியுள்ளார். மேலும் விரைவில் கபாலியை தரிசிக்கவுள்ளதாகவும் ராஜமௌலி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்,