சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
கபாலி பீவர் மலையாள ரசிகர்களையும் நடிகர்களையும்கூட விட்டுவைக்கவில்லை. மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாசுடன் ஆரவாரமாக நேற்று அதிகாலை 2 மணிக்கே காசி தியேட்டரில் படம் பார்த்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.. நிவின்பாலியும் தான் கேரளாவில் 'கபாலி' படம் பார்ப்பதாக பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். ஆனால் மலையாள இளம் இயக்குனரும் நடிகருமான வினீத் சீனிவாசனோ நேற்று கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் காலை ஆறுமணி காட்சியை பார்க்க வந்திருந்தார். நிவின்பாலி நடித்த 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தை இயக்கினாரே அவரே தான்.
அவர் மட்டுமல்ல, அவருடன் அவரது மனைவி திவ்யா மற்றும் அவரது உதவி இயக்குனர்கள் குழு உள்ளிட்ட பத்து பேருக்கும் குறையாமல் 'கபாலி' படம் போட்ட டீசர்ட்டுடன் 'தலைவர்' படத்தை பார்க்க ஆஜராகினர்.. இதில் என்ன பியூட்டி என்றால் காலையில் காசி தியேட்டரில் ஜெயராமிற்கு ரஜினி ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு கிடைத்த நிலையில், இங்கே வினீத் சீனிவாசனை பலருக்கு அடையாளம் தெரியாததால் அவர்கள் வெகு இயல்பாக தியேட்டருக்குள் வளைய வந்தனர். வினீத் சீனிவாசனை போன்றவர்கள் சத்யம் தியேட்டருக்கு போகாமல், ரோகிணி தியேட்டருக்கு படம் பார்க்க வந்தது ஆச்சர்யம் தான்.. அதேசமயம் சத்யம், ஐநாக்ஸ் போன்ற தியேட்டர்களுக்கு சென்றிருந்தால் வினித் சீனிவாசனை பலரும் அடையாளம் கண்டு மொய்த்திருப்பார்கள் என்பதும் உண்மை.