தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சீயான் விக்ரம் படித்தது ஏற்காடு மான்போர்ட் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில். அந்த பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று தொடங்கியது. இதில் அந்த பள்ளியில் படித்த நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் விக்ரமும் கலந்து கொண்டார். நேற்று நடந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியல் விக்ரமுடன் படித்த பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் விக்ரம் மகிழ்ச்சியுடன் பேசி மகிழ்ந்தார்.
விழாவில் முன்னாள் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் விக்ரம் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சியின் முடிவில் மாணவ மாணவிகளுடன் ஆட விரும்புவதாக பள்ளி முதல்வர் வர்கீசிடம் அனுமதி கேட்டார். அதற்கு அவர் சம்மதம் தெரிவிக்கவே மைதானத்தில் இறங்கினார் விக்ரம். அப்போது அவர் 'மாரி'படத்தில் வரும் ஓப்பனிங் சாங்கான “ஏய் பெருசு....”. என்ற குத்துப்பாடலுக்கு மாணவ, மாணவிகளுடன் இணைந்து செம குத்தாட்டம் போட்டார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் விக்ரம் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.