'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜீவா அதிகமாக எதிர்பார்த்த யான், போக்கிரி ராஜா படங்கள் அவரை பெரிதாக ஏமாற்றி விட்டன. இதில் போக்கிரிராஜா படம் அந்த படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ்க்கு சாதகமாகி விட்டது. அதனால் உடனடியாக தனக்கொரு ஹிட் கட்டாயம் தேவை என்பதால் திருநாள், கவலை வேண்டாம் படங்களில் முழுவீச்சில் இறங்கினார் ஜீவா. அதோடு, மார்க்கெட் இல்லாத நடிகைகள் தன்னுடன் நடித்தால் அதுவே பாதகமாகி விடும் என்று மார்க்கெட்டில் இருக்கும் நயன்தாராவை திருநாள் படத்திலும், காஜல்அகர்வாலை கவலை வேண்டாம் படத்திலும் கூட்டணி சேர்த்துக்கொண்டார்.
அந்த வகையில், ஜீவா பெரிய நம்பிக்கை வைத்து நடித்து வந்த இந்த இரண்டு படங்களுமே தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதில், நயன்தாராவுடன் இணைந்து நடித்த திருநாள் படம் ஆகஸ்ட் மாதமும், கவலை வேண்டாம் படம் செப்டம்பர் மாதமும் திரைக்கு வருகிறதாம். மேலும், சமீபகாலமாக நயன்தாரா நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து வருவதால், அந்த வரிசையில் திருநாள் படமும் இடம் பிடிக்கும் என்று பெரிய நம்பிக்கை வைத்துள்ள ஜீவா, இந்தபடத்தை சரியான தியேட்டர்களில் வெளியிட்டு எப்படியும் படத்தை ஹிட் பண்ணி விடவேண்டும் என்று அடுத்தக்கட்ட வேலைகளில் இறங்கியிருக்கிறார்.