பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கபாலி' படம் எல்லா வகையிலும் பல சாதனைகளையும், பல புதுமைகளையும். பல ஆச்சர்யங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு தியேட்டரில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டப்படி குற்றம். அந்த குற்றத்தை செய்வதற்காக பெரம்பலூர் தியேட்டர்காரர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் நேரடியாகவே அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதாவது திருடுவதற்கு போலீசிடம் அனுமதி கேட்பதைப்போல. “கூடுதல் விலை கொடுத்து படத்தை வாங்கியிருக்கிறோம் போட்ட பணத்தை எடுக்க டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்க அனுமதிக்க வேண்டும்” என்று அதற்கு காரணம் கூறியிருக்கிறார்கள்.
அரசு அதிகாரிகள் உறுதியாக அதற்கு அனுமதி மறுத்ததோடு மீறி விற்றால் தியேட்டர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கூறியுள்ளனர். இதனால் கோபம் அடைந்த தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் நேற்று பெரம்பலூரில் கபாலியை திரையிடவில்லை. இதனால் கட்அவுட், பாலாபிஷேகம் தோரணம் என்று உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் திரும்பினார்கள். இப்படி ஒரு நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்திருப்பது இதுவே முதல்முறை.