‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஏவிஎம் நிறுவனமும், எஸ்.பி.முத்துராமனும் நகமும் சதையும்போல என அனைவரும் அறிந்த ஒன்று. ஏவிஎம் சரவணன் போன்றே எப்போதும் வெள்ளை ஆடைதான் அணிவார். அவரைப்போலவே பணிவானவர். மரியாதையான பண்பாளர், ஏவிஎம் நிறுவனத்திற்குள்ளேயே அவருக்கு ஒரு அலுவலகமே அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஏவிஎம் நிறுவனத்தில் எஸ்.பி.முத்துராமன் இல்லாமல் எந்த விழாவும் நடக்காது. அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்த எஸ்.பி.முத்துராமன் அந்த நிறுவனத்திடம் கோபித்துக் கொண்டு வெளியேறிய சம்பவமும் நடந்துள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எஸ்.பி.முத்துராமன் சினிமா ஆசையில் சென்னை வந்தவர், ஏவிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆரம்பத்தில் எட்டிங் கற்றுக் கொண்ட அவர், பின்னர் அதே ஸ்டூடியோவில் பல வேலைகளை பார்த்து கடைசியாக ஏ.சி.திருலோகச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். சீனியாரிட்டி படி ஏவிஎம்மில் அவர்தான் அடுத்த இயக்குனராக வேண்டும்.
இந்த நேரத்தில் இயக்குன் ஸ்ரீதரிடம் உதவியாளராக இருந்த சித்ராலயா கோபு, 'காசேதான் கடவுளடா' என்ற நாடகத்தை நடத்தி வந்தார். இது அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த நாடகத்தை சினிமாவாக எடுக்க ஏ.வி.மெய்யப்ப செட்டியார் விரும்பினார். ஆனால் சித்ராலயா கோபுவோ “நான் இயக்குவதாக இருந்தால் நாடகத்தை தருகிறேன்” என்ற கூறிவிட்டார்.
'காசேதான் கடவுளா' படத்தின் மூலம் எஸ்.பி.முத்துராமனை இயக்குனராக அறிமுகப்படுத்த நினைத்திருந்தார் செட்டியார். ஆனால் கோபு பிடிவாதகமாக இருக்கவே சினிமா அனுபவம் இல்லாத கோபுவுக்கு துணையாக இருக்குமாறு எஸ்.பி.முத்துராமனை பணித்தார் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். பல வருட அனுபவம் மிக்க நான் ஒரு நாடக இயக்குனருக்கு உதவியாளராக பணியாற்றுவதா என்று கருதிய எஸ்.பி.முத்துராமன், ஏவிஎம்மை விட்டு வெளியேறினார். அதன் பிறகு 'கனிமுத்து பாப்பா'வில் ஆரம்பித்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.
நீண்ட நாள் படம் தயாரிக்காமல் இருந்த ஏவிஎம் நிறுவனம் பிறகு 'முரட்டுக்காளை' படத்தை தயாரிக்க முன்வந்தபோது அந்தப் படத்தின் கதாசிரியரான பஞ்சு அருணாசலம், “எஸ்.பி.முத்துராமன் இயக்குவதாக இருந்தால் முரட்டுக்காளை கதையை தருகிறேன்” என்று கூறிவிட்டார். அதன் பிறகு ஏவிஎம் செட்டியார், “முத்துராமன் தன்னை வெற்றிகரமான தயாரிப்பாளராக நிரூபித்தவர் நம்ம குடும்பத்து பிள்ளை அவரையே இயக்கச் சொல்லு” என்று மகன் சரவணனிடம் சொன்னார். எஸ்.பி.எம்மும் பழசை மறந்து 'முரட்டுக்காளை'யை இயக்கினார். அன்று முதல் எவிஎம் நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டார் எஸ்.பி.முத்துராமன்.