ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம், வாரி போட்டுக் கொள்வதில்லை தினேஷ். தனக்கு மிகவும் பிடிக்கும் கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, கபாலி படத்தில் இவரும் கவனிக்கப்படும் கதாபாத்திரமே; இனி தினேஷ், நமக்கு தரும் சிறப்பு பேட்டி:
கபாலியில் உங்க கதாபாத்திரம்?
ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். படத்தில், ஒரு கேங்ஸ்டர் கூட்டம் இருக்கு; அதில் நானும் ஒருவன். கறுப்பு கண்ணாடி, கையில் பச்சை குத்தி, கெட்டப்பே வேற மாதிரி இருக்கும். இந்த படத்துக்காக, கொஞ்சம் உடம்பு ஏற்றினேன்; மீசையில் கொஞ்சம் மாற்றம் செய்தேன்.
ரஜினியிடம் படப்பிடிப்பில் பார்த்து, வியந்த விஷயம்?
மலேஷியா நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடந்தது. ரொம்ப கஷ்டமான சூழல். மதியம், 3:00 மணி வரை, பிரேக் விடாமல் படப்பிடிப்பு நடந்தது. ரோட்டில் அவ்ளோ கூட்டம்; அவரும் எங்களோடு தான் நின்றார். படப்பிடிப்பை முடிக்கும்போது, 4:15 மணி; அதுவரை, எங்கேயும் நகரவில்லை. ரஜினி சார், இயக்குனரின் நடிகராவே இருக்கிறார். இயக்குனர், ஓகே கூறினால் தான், அந்த இடத்தில் இருந்து போகிறார். இதையெல்லாம், பக்கத்தில் இருந்து பார்த்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
ரஜினியுடன் உங்களுக்கு காட்சி இருக்கா; அந்த அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.
முதல் நாள் படப்பிடிப்பின் முதல் காட்சி, நானும், ரஜினி சாரும் பேசுறது தான். ஐந்து நிமிடம் முன்னாடி தான், எனக்கு பெரிய டயலாக் கொடுத்து பேச சொன்னாங்க. கொஞ்சம் டைம் எடுத்து, படித்து முடித்து, உள்ளே போய் நடித்தேன். ஷாட் நல்லபடியாக முடிந்ததும், எனக்கு பயங்கர கைதட்டல். ரஜினி சார் கூட நடித்த முதல் நாள் அனுபவமே ரொம்ப இனிமையா இருந்தது. போகப் போக, அவரது அனுபவங்களை எல்லாம் எங்களிடம் பகிர்ந்து கொண்டார். என் பிறந்த நாள் அன்று, அவருக்கு விசாரணை டிரெய்லர் போட்டு காட்டினேன்; பின், படம் பார்த்து விட்டு, சூட்டிங் வந்தார். நேராக என்னை பார்த்து, கட்டிப் பிடித்து பாராட்டினார்.
விசாரணை பட அனுபவம்?
அந்த படம் கொஞ்சம் வலி தான். படப்பிடிப்பு தளத்தில், நிறைய அடி வாங்கினேன். ரிலாக்ஸ் செய்ய, தண்ணீர் ஒரு கிளாஸ் குடிப்பேன், குடித்து விட்டு திரும்ப அடி வாங்குவேன். படப்பிடிப்புக்கு, விசாரணை கதை எழுதிய, சந்திரகுமாரும் வருவார். அவர் சொல்லும் அனுபவங்களை கேட்டால், அப்படி பதறும். அந்த படம், எனக்கு நல்ல பேரை பெற்று தந்தது.
எந்த மாதிரி படங்களில் நடிக்க விருப்பம்?
அட்டக்கத்தி மாதிரி ஜாலியான படம் பண்ணப் பிடிக்கும். சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன். இளைஞர்கள் கொண்டாடும் படமாக இருக்க வேண்டும்; மக்களை போய் சேர வேண்டும்.
அதிக படங்களில் நடிப்பது இல்லையே; ஏன்?
எனக்கு கதை முக்கியம்; சமீபத்தில், வெளி வந்த ஒரு நாள் கூத்து படத்தில், அதில் நடித்த கதாநாயகியர் தான் படத்தில் கதாநாயகன்; நான் சப்போர்ட்டிங் தான்; ஆனால், அப்படம் என் படமாக மாறியது. இப்படிப்பட்ட படங்களில் தான் நடிக்க வேண்டும் என்ற வரைமுறை எதுவும் இல்லை. ஆனால், எனக்கு பிடித்த கதை, பிடித்தவர்களோடு வேலை பார்க்கிறேன். நான் நடித்த எந்த படமும் மிகப்பெரிய தோல்வியை அடையவில்லை.
நீங்கள் நடித்த படங்கள் தோல்வி அடையவில்லை என்பது உண்மை தான்; ஆனால், விசாரணை போன்ற படங்கள் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லையே?
அதற்கு நான் என்ன செய்வது? த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் வசூலை குவிக்கிறது; இதற்கான காரணத்தை ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும். படத்தில் நடிப்பது தான் என் வேலை; படம் பார்க்க, மக்களை அழைத்து வர முடியாது.
நீங்கள் யாரையோ காதலிப்பதாக...
அய்யோ, அப்படி எல்லாம் இல்லை; யாரோ கொளுத்தி போட்டுருக்காங்க. சினிமாவில் ஒரு நல்ல இடத்துக்கு வருவதற்காக போராடிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் திட்டமிடல் அவசியம். இன்னும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பின், கல்யாணத்தை பற்றி பேசலாம்.
கபாலிக்கு பின், உங்கள் சம்பளம் கூடிடுமா?