டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஷாலை ஆக்ஷ்ன் ஹீரோவாக உயர்த்திய படம் 'சண்டக்கோழி'. இதில் அவருக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். ராஜ்கிரண் முக்கிய கேரக்டரில் நடித்தார். 2005ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை லிங்குசாமி இயக்கி இருந்தார். இப்போது 11 வருடங்களுக்கு பிறகு 'சண்டக்கோழி பார்ட் 2' தயாராக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே 'பார்ட் 2' வந்திருக்க வேண்டும். லிங்குசாமிக்கு ஏற்பட்ட சில பொருளாதார பிரச்சினைகள், லிங்குசாமி, விஷால் இடையே இருந்த சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தள்ளிப்போனது. இப்போது அனைத்தும் சரி செய்யப்பட்டு 'சண்டக்கோழி பார்ட் 2' தயாராகப்போகிறது.
தற்போது தெலுங்கு படத்தை இயக்கி வரும் லிங்குசாமி அதை முடித்த பிறகு, 'துப்பறிவாளன்', 'கத்தி சண்டை' படங்களில் நடித்து வரும் விஷால் அதை முடித்துக் கொண்டும் வந்த பிறகு 'சண்டக்கோழி பார்ட் 2' உருவாக இருக்கிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. முந்தைய எபிசோட்டில் காதலியாக இருந்த மீரா ஜாஸ்மின், சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வது போன்று அவரது கேரக்டர் மாற்றி அமைக்கப்படுகிறது. ராஜ்கிரண் அதே கேரக்டரில் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹீரோயின் தேடி வந்தார்கள். தற்போது மஞ்சிமா மோகன் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விஷாலின் புதிய காதலியாகவும், அத்தை மகளாகவும் மஞ்சிமா மோகன் நடிக்கிறார் என்பது யூனிட் வட்டாரத் தகவல்.