டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபத்தில் சர்ச்சையுடன் வெளியான படம் ‛உட்தா பஞ்சாப்'. இப்படத்தில் ஷாகித் கபூர், ஆலியாபட், கரீனா கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இவர்களில் ஆலியாபட்டின் ரோல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் ஆலியா, பீகார் பெண்ணாக நடித்திருந்தார். ஆலியாவின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று ஷாகித் கபூர், சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இப்போது அதே கருத்தை நடிகை கரீனா கபூரும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கரீனா மேலும் கூறியதாவது... ‛‛ஷாகித் கபூர் சொன்னதை நான் ஏற்கிறேன். உட்தா பஞ்சாப் படத்தில் ஆலியாவின் நடிப்பு அருமையாக இருந்தது. ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரின் நடிப்பை பாராட்டினார்கள். தேசிய விருதுக்கு ஆலியா தகுதியானவர், அவருக்கு விருது கிடைக்கும்'' என்று கூறியுள்ளார்.