நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழகம், கர்நாடகா, கேரளம், ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். இவர் மறைந்த பின்னர் இவரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ், ‛வனயுத்தம்' என்ற பெயரில் வீரப்பன் பற்றிய படத்தை எடுத்தார். அதன்பின்னர் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை ‛கில்லிங் வீரப்பன்' என்ற பெயரில் படம் எடுத்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஹிந்தி, தெலுங்கில் இப்படம் ரிலீஸான நிலையில், தமிழில், இப்படம் இன்று(ஜூலை 1-ம் தேதி) ‛வில்லாதி வில்லன் வீரப்பன்' என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் வீரப்பனை தவறாக சித்தரித்துள்ளதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி குற்றம் சாட்டியுள்ளதோடு இப்படத்திற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.
தவறாக சித்தரிப்பு : இப்படம் தொடர்பாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் முத்துலட்சுமி. அப்போது அவர் பேசும்போது... ‛‛வில்லாதி வில்லன் வீரப்பன் படத்தில் வரும் கதைகள் முற்றிலும் பொய்யானது. என்னைப்பற்றியும், எனது கணவர் பற்றியும் தவறாக சித்தரித்துள்ளனர். தமிழக மக்கள் யாரும் இப்படத்தை பார்க்க வேண்டும். உங்களின் நேரத்தையும், பணத்தையும் இப்படத்திற்காக செலவழித்து வீணாக்காதீர்கள். இப்படத்தை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.
நானே படம் எடுக்கபோகிறேன் : என் கணவர் பற்றிய உண்மை சம்பவங்களை நானே விரைவில் படமாக எடுக்க உள்ளேன். அவரின் சின்ன வயது முதல், என் கணவர் எப்படி சந்தன மரங்கள் கடத்த ஆரம்பித்தார், அதற்கான சூழல் என்ன உள்ளிட்ட பல விஷயங்களையும் அந்தப்படத்தில் சொல்வேன். அப்போது பல உண்மை விஷயங்கள் வெளிவரும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகருக்கும், என் கணவருக்கும் நேரடி தொடர்பு எதுவும் கிடையாது.
ஏமாற்றிவிட்டார் ராம் கோபால் வர்மா : என் கணவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக ராம் கோபால் வர்மா என்னிடம் சொன்னார். நான் அவரிடத்தில், என் கணவரை தவறாக சித்தரிக்க கூடாது என்று வேண்டுகோள் வைத்தேன். அவரும் உண்மை சம்பவத்தை படமாக எடுக்கிறேன் என்று கூறினார். அதனால் ஹிந்தி ரைட்ஸ் மட்டும் கொடுத்திருந்தேன். என்னை நம்ப வைத்து ஏமாற்றி மற்ற மொழிகளிலும் படம் இயக்க கையெழுத்து வாங்கியிருந்தார். ராம் கோபால் வர்மா மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தேன். ஆனால் அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவில்லை. ராம் கோபால் வர்மா மீது கர்நாடக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.