அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
இயக்குனர் சுந்தர்.சியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் வெவ்வேறு துறைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியது இல்லை. ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் படங்களை சுந்தர்.சி இயக்கியுள்ளார். ஆனாலும் அந்தப்படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவில்லை.
சுந்தர்.சியின் படங்களைப் பொறுத்தவரை அவரே ஹீரோ... அவரின் காமெடிக் காட்சிகளுக்காகவே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுக்கிறார்கள். அதனாலோ, என்னவோ, சிற்பி, இமான், ஹிப்ஹாப் தமிழா என தனக்கு அடக்கமான இசையமைப்பாளர்களை வைத்து படம் பண்ணி வந்தார். ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பெரிய இசையமைப்பாளரின் தயவு அவருக்கு இதுவரை தேவைப்பட்டதில்லை.
முதன்முறையாக இப்போது சுந்தர்.சி இயக்கும் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் தேவைப்பட்டுள்ளார். இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறேன் என சமீபத்தில் சுந்தர்.சி அறிவித்திருந்தார். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக இப்படம் உருவாகவிருக்கிறது என்றும் சொன்னார். அப்படத்தின் இசையமைப்பாளராக பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதிகாரபூர்வமாக இத்தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிக்கவிருக்கும் நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.