ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி, கமல் உட்பட தமிழ்ப்பட ஹீரோக்கள் பலருக்கு பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. அதற்கான முயற்சிகளில் இறங்கி சில பல ஹிந்திப்படங்களிலும் நடித்தனர். இப்போது காலம் மாறிவிட்டது. பாலிவுட் நடிகர்களுக்கு தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். அதற்கு முன்னதாக, குமாரராஜா தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்து, தேசிய விருதை வென்ற 'ஆரண்யகாண்டம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப். அந்தப்படத்தில் அவர் ஏற்றிருந்த சிங்கபெருமாள் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி விமர்சகர்களிடத்திலும் பெரிய அளவில் பேசப்பட்டது.
இப்படத்தைத் தொடர்ந்து, மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்ட ரஜினியின் 'கோச்சடையான்' படத்தில், வில்லனாக நடித்தார். ஜாக்கி ஷெராஃப் கேரக்டர் மோஷன் கேப்சர் டெக்னாலஜி மூலம் உருவாக்கப்பட்டது. இப்போது... தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாயவன்' படத்தின் மூலம் தனது 3ஆவது தமிழ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கி.
“இப்படத்தில் நான் இராணுவ வீரனாக நடிக்கிறேன், ஆனால் அது மட்டுமே உண்மையல்ல... என்னுடைய கேரக்டரில் ஒரு ட்விஸ்ட்டும் இருக்கிறது'' என்று அவரின் கேரக்டர் பற்றி குறிப்பிட்டுள்ள ஜாக்கி ஷெராஃப்,“ ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்தாலும் அது மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதால் அவருடைய பெரியளவில் சேர்ந்து நடிக்க முடியவில்லை, அவருடன் ஒரு முழுநீள படத்தில் இணைந்து நடிக்க வேண்டும், மாயவன் படத்திற்குப் பிறகு மேலும் தமிழ் சினிமாவில் பல நல்ல கேரக்டர்கள் தனக்காக வரும்” என்று நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.