தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எடிட்டர் மோகனிடம் உதவியாளராக இருந்து, பாலுமகேந்திராவின் ஆஸ்தான எடிட்டராக இருந்தவர் பீட்டர் பாபியா. ஆளவந்தான், சதிலீலாவதி, புதுமைபித்தன், கள்ளழகர், டிஷ்யூம், ரோஜாகூட்டம் உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
தற்போது மிராக்கிள் தியேட்டர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'எமோஜி' என்ற படத்தை தயாரிக்கிறார். ஜித்து, சதீஷ், சிவநேசன் ஆகிய மூவரும் ஹீரோவாக நடிக்கிறார்கள். சாய் ஹீரோயினாக நடிக்கிறார். கீதா, ஜபா, வேணி ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர். வெங்கட் இயக்குகிறார். இவர்கள் அனைவருமே சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள்.
படம் தயாரிப்பது பற்றி எடிட்டிர் பீட்டர் பாபியா கூறியதாவது: படத்தின் கதை வித்தியாசமானது. ஷார்ட் பிலிம் எடுக்க நினைக்கும் நான்கு இளைஞர்கள் அனைத்து அம்சங்களும் கொண்டவர்கள். துடிப்புள்ள அவர்களின் குறிக்கோள் அதிகப்படியான லைக்குகளை அள்ள வேண்டும் என்பது தான்.
அதற்கு என்ன வழி என்று யோசிகிறார்கள். முக்கிய பிரமுகர் ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை கதைக் கருவாக்குகிறார்கள். அதனால் வரப்போகும் விபரீதம் தெரியாமல் தொட்ட அந்த விஷயம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பது கதைகரு. இன்றைய தலை முறையினரின் தகவல் பரிமாற்றத்தில் உள்ள விஷயமே எமோஜி. அதாவது குறியீட்டின் மூலம் தங்களது எண்ணங்களை பரிமாறிக் கொள்ளும் வழிமுறையே எமோஜி. ஆக்ஷன் படமாக உருவாகும் எமோஜி படப்பிடிப்பு சென்னை, மும்பை, ஊட்டி, கோவா போன்ற இடங்களில் நடைபெற உள்ளது என்றார் பீட்டர் பாபியா.