இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'இரண்டாம் உலகம்' படத்திற்குப் பிறகு 'காண்' படத்தை இயக்க ஆரம்பித்த செல்வராகவன் அந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். இருந்தாலும் சிறிய இடைவெளிக்குப் பிறகு 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை ஆரம்பித்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி தற்போது அதையும் முடித்துவிட்டார். செல்வராகவனின் இந்த வேகமான பணி குறித்து தமிழ்த் திரையுலகமே ஆச்சரியத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறது. பொதுவாக பட்ஜெட்டை இழுப்பதிலும், ஷுட்டிங் தேதிகளை நீட்டிப்பதிலும் செல்வராகவன் பாணியே தனி என்பார்கள்.
ஆனால், இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரித்திருப்பதால் படம் ஆரம்பிக்கும் போதே அனைத்தையும் தெளிவாகப் பேசிவிட்டார் என்கிறார்கள். இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்க ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது.
படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்ததையடுத்து விரைவில் படத்தின் டீசரும், பாடல்களும் வெளியாக உள்ளது. இந்தப் படம் செல்வராகவனுக்கு நிச்சயம் வேறு ஒரு பெயரைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.