பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காமெடி நடிகர் குமரிமுத்து என்றாலே அவரது அந்த கலகலக சிரிப்புதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். அந்த சிரிப்பு தோன்றிய ரகசியம் இதுதான்.
'முள்ளும் மலரும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் குமரிமுத்து, 'இது நம்ம ஆளு' படத்தில் தான் அவர் பிரபலமானார். ராபர்ட் ராஜசேகரன் இயக்கிய 'சின்னபூவே மெல்ல பேசு' என்ற படத்தில் குமரிமுத்து நடித்தார். மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் பச்சிலை வைத்தியர் கேரக்டர். நோயாளிகளுக்கு சும்மானாச்சுக்கும் ஏதாவது பச்சிலையை கொடுப்பார். அது அவர்களுக்கு இல்லாத புதிய பிரச்சினையை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் வந்து “என்னய்யா பச்சிலை கொடுத்தே இப்படி ஆகிப்போச்சேன்”னு வந்து சொல்வாங்க. அதுக்கு அவர் ஒரு அசட்டு சிரிப்பு சிரிக்கணும். இதுதான் காட்சி.
இந்த காட்சி எடுக்கும்போது இயக்குனர் ராஜசேகரன் குமரிமுத்துவை பலவிதமான அசட்டு சிரிப்பு சிரிச்சு காட்டச் சொன்னார்கள். அவர் செய்தது எதுவுமே இயக்குனர்களுக்கு பிடிக்கவில்லை “எப்படியோ சிரிச்சு தொலைங்க” என்று கூறிவிட்டு டேக் போனார்கள். எப்படி சிரிச்சாலும் இயக்குனர்களுக்கு பிடிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த குமரிமுத்து டேக் போனதும் வெறித்தனமாக கலகலவென சிரித்தார். அந்த சிரிப்பை கேட்டு யூனிட்டே அதிர்ந்தது. இயக்குனர்களுக்கும் அந்த சிரிப்பு பிடித்திருந்தது. ஒரு காட்சியில் வைத்திருந்த சிரிப்பை பல காட்சிக்கு பயன்படுத்தினார்கள். அன்று முதல் அந்த சிரிப்பு குமரிமுத்துவின் அடையாளமாகிப் போனது.
சினிமாவில் நடித்தாலும், தேர்தல் பிரச்சாரத்துக்கு போனாலும், ஆன்மீக சொற்பொழிவுக்கு போனாலும் அந்த சிரிப்புதான் அவருக்கு டிரேட் மார்க். ஒரே ஒரு சிரிப்பை வைத்துக் கொண்டே தன் வாழ்நாள் முழுக்க கலைஞனாக வாழ்ந்தார் குமரிமுத்து.